Skip to main content

உக்ரைனில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படும் - ஐநா வேதனை

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Ukraine faces severe water shortages - UN woes

 

உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் ககோவ்கா அணை உடைந்ததை தொடர்ந்து அந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பல மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் உக்ரைனின் முக்கிய அணையான நோவா ககோவ்கா அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்த அணையின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசம் அடைந்திருக்கிறது. 

 

ககோவ்கா அணையின் கீழ் பகுதியில் நைவர் எனும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைச் சுற்றி பல ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் விளை நிலங்களும் அந்த ஆற்றைச் சுற்றி உள்ளன. தற்போது அந்த அணையின் ஒரு பகுதி உடைந்ததால் அங்கிருந்து வெளியேறும் நீர் ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து அந்த ஆற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அவை மூழ்கி வருகின்றன.

 

உக்ரைனில் உள்ள நோவா ககோவ்கா அணை முழுதாக உடைந்தால் 80 நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி கூறியுள்ளார். அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உக்ரைனின் கெர்சன் நகரத்திற்கு வெள்ள அபாயமும், அதனால் பேரழிவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

அணை உடைக்கப்பட்டு அதன் அருகில் உள்ள நீர்மின் நிலையத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் ஏற்படலாம் என்ற பதற்றமும் அங்கு நிலவி வருகிறது. ஏற்கனவே உக்ரைனில் போரினால் பதற்றம் நிலவி வரும் சூழலில் அணை உடைப்பினால் மேலும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை இரு நாட்டு  ராணுவமும் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை நைவர் ஆற்றின் இரு கரைகளில் இருந்தும் 3,000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

தாக்குதலில் உடைந்துள்ள ககோவ்கா அணை குறித்து பேசியுள்ள உக்ரைன் அரசு, ககோவ்கா அணையின் மேற்கு கரையையும், அதனை ஒட்டியுள்ள கெர்சன் நகரையும் உக்ரைன் அரசு தான் நிர்வகித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த விபத்துக்கு காரணம் ரஷ்யா இராணுவம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த அணை உடைந்த விவகாரம் குறித்து ரஷ்யா கூறுகையில், ஆற்றின் மேற்கு கரையை ரஷ்யா நிர்வகித்து வரும் நிலையில் உக்ரைன் ராணுவமே இந்த விவகாரத்திற்கு காரணம் என ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்தி வருகின்றனர். 

 

உக்ரைன் நாட்டில் உள்ள ககோவ்கா அணை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. ‘இந்தச் சூழலில் சுகாதாரமான குடிநீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படக்கூடும்’ என்று வேதனை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.