Skip to main content

புதிய பங்களாவில் ட்ரம்ப்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஏரியாக்காரர்கள்... காரணம் என்ன..?

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

trump moves to Mar-a-Lago residence

 

அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் பிறகு அந்நாட்டில் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுள்ளனர். தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது தரப்பினர், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற வளாகத்தில் கலவரத்தில் ஈடுபடுவது என அனைத்துவகையான குளறுபடிகளையும் ஏற்படுத்தினர். இவை அனைத்தையும் கடந்து அதிபராகப் பதவியேற்றுள்ளார் பைடன். 

 

இந்தச் சூழலில், பதவியிலிருந்து விலகிய முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஓய்வெடுப்பதற்காக தனது 160 மில்லியன் மதிப்புள்ள சொகுசு பங்களாவில் குடியேறியுள்ளார். 20 ஏக்கர் பரப்பளவில், அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளை பால்கனியில் இருந்து கண்டு ரசிக்கும் வகையில் புளோரிடா கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது இந்த பங்களா.

 

1985 ஆம் ஆண்டில் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த மாளிகையை வாங்கிய ட்ரம்ப், இதனை ஒரு தனியார் கிளப்பாக மாற்றினார். 128 அறைகளைக் கொண்டு மூரிஷ்-மத்திய தரைக்கடல் கட்டடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த பங்களாவின் ஒரு தனிப்பட்ட பகுதியைத் தனது இல்லமாக மாற்றினார் ட்ரம்ப். அவர் நான்கு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தபோது, அவரது ‘குளிர்கால இல்லமாக’ இருந்தது இந்த பங்களாதான். 

 

20 ஏக்கர் பரப்பளவில் 128 அறைகள் கொண்ட விடுதி, 22,000 சதுர அடி பரப்பளவிலான மிகப்பெரிய நடன அரங்கம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் நீச்சல்குளம் போன்ற ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ள இந்த பங்களாதான் புளோரிடாவில் இரண்டாவது மிகப்பெரிய பங்களா ஆகும். 2024 தேர்தலில் போட்டியிடும் திட்டத்தோடு உள்ள ட்ரம்ப், இந்த இல்லத்திலிருந்தே இன்னும் சில காலம் செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது. ஓய்வுக்காகவும், அதன் பின்னதான தனது அரசியல் பயணத்திற்காகத் திட்டமிடும் வகையிலும் ட்ரம்ப் இந்த பங்களாவிற்குக் குடிபெயர்ந்திருந்தாலும், ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது தனியுரிமைகள் ட்ரம்ப் வருகையால் பாதிக்கப்படக்கூடும் எனக்கூறி அவரது குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். 

 

இதுமட்டுமல்லாமல், ட்ரம்ப் குடியேறியிருப்பது கிளப் பகுதி என்பதால், 1993 ஆம் ஆண்டு பாம் பீச் ஸ்டேட்ஸ் கிளப்புடனான அரசு ஒப்பந்தத்தின்படி, இப்பகுதியில் உள்ள கிளப்களில், ஒருவர் வருடத்திற்கு 21 நாட்களுக்கு மேல் தங்கமுடியாது. அதேபோல, தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. அதனால், இந்த கிளப்பை ட்ரம்ப், அவரது நிரந்தர வீடாக மாற்றினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.