போலந்து நாட்டின் சாங்கோ மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.

z

Advertisment

அவரது வயிற்றில் 1898 கற்கள் குடல் மற்றும் வயிற்றை அடைத்துக்கொண்டு இருந்துள்ளது. அவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த கற்கள் எப்படி அவர் வயிற்றினுள் சென்றன என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. அவரே சாப்பிட்டாரா என்பது மயக்கம் தெளிந்து அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.