Skip to main content

82 அடி உயரமுள்ள பீப்பாயில் 72 நாட்கள் தங்கியிருந்து சாதனை!

Published on 08/02/2020 | Edited on 09/02/2020


கிட்டதட்ட 80 அடி உயரத்தில் வயதான ஒருவர் 72 நாள் தங்கியிருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 அடி உயரத்தில் நின்றாலே சிலருக்கு தலை சுற்றலில் ஆரம்பித்து வாந்தி வரை சிலர் எடுத்துவிடுவார்கள். இந்நிலையில், தென்ஆப்ரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் என்பவர் சுமார் 82 அடி உயரமுள்ள ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பீப்பாயில் கடந்த 72 நாட்களாக தங்கியுள்ளார்.
 

sd



இவர் 23 ஆண்டுகளுக்கு முன்னரே 1997ம் ஆண்டு இதே போன்று 25 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்திருந்தார். தன்னுடைய முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

இணையத்தில் வைரலாகும் வாட்டர் சேலஞ்ச் வீடியோ!

Published on 17/02/2020 | Edited on 18/02/2020

இளையதளங்களில் தற்போதெல்லாம் அடிக்கடி வைரல் வீடியோக்கள் வெளியாவது உண்டு. புதுபுது எண்ண ஓட்டத்தில் இளைஞர்கள் வீடியோக்களை உருவாக்கி அதனை வைரலாக்கி வருவார்கள். அந்த வகையில் ஸ்கல் பிரேக்கிங் என்ற பெயரில் தண்ணீரில் நடக்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது. 

 


இந்த சேலஞ்சின் படி, அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஓடிவந்து உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீரில் கால் வைத்து அதனை தாண்டுகிறார். இந்த முயற்சியை யாரும் செய்ய வேண்டாம் என்ற வேண்டுகளை விடுத்துபடியே அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது வைரலாகி வருகின்றது.

 


 

Next Story

போலீசாரை கலங்க வைத்த சிறுவனின் வைரல் வீடியோ

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

இந்தோனேஷியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் போக்குவரத்து காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே ஒரு சிறுவன் தன்னுடைய குட்டி பைக்கில் தங்கையுடன் வேகமாக வந்துள்ளான். இதைப் பார்த்த போலீசார் அந்த குட்டி பைக்கை நிறுத்தி அவனிடம் விசாரித்தபோது அழத்தொடங்கிவிட்டான் அந்த சிறுவன். 

 

bike

 

bike

 

bike

 

bike

 

இதனால் அந்த சிறுவனின் அழுகையை நிறுத்த போலீசார் முயன்றும், அவன் அழுதுகொண்டே இருந்ததால் இறுதியில் அந்த சிறுவனை  சமதானப்படுத்தி வீடுவரை சென்று பெற்றோர்களிடம் அறிவுரைகூறி விட்டுவந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.