Skip to main content

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சை துவக்கி வைத்த மற்றொருவரும் மரணம்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Patrick Quinn

 

ஐஸ் பக்கெட் சேலஞ்சை துவக்கி வைத்தவர்களில் ஒருவரான பீட் ஃப்ரேட்ஸ் கடந்த ஆண்டின் இறுதியில் மரணமடைந்த நிலையில், மற்றொருவரான பேட்ரிக் க்வின் நேற்று மரணமடைந்தார்.

 

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும் 'சேலஞ்ச்' என்ற பெயரில் தினமும் புதியபுதிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகின்றன. அந்தவகையில், சில வருடங்களுக்கு முன்னர், 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' எனும் பெயரில் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. அதாவது, வாளியில் நிரப்பப்பட்ட குளிர்ந்த நீரை தன் உடலில் கொட்டிக்கொள்வதே இந்த சேலஞ்ச்சின் அடிப்படையாகும். பின்னர் இது லூ கெஹ்ரிக் என்ற கொடிய நரம்பியல் நோய்க்கு எதிரான ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் முயற்சி எனத் தெரியவந்தது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் தெரியவந்ததும், பலரும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சில் ஈடுபட்டு நிதி திரட்டுவதில் தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

 

இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சை துவக்கி வைத்தவர்களில் ஒருவரான பேட்ரிக் க்வின் நேற்று மரணமடைந்தார். கடந்த 7 ஆண்டுகளாக, 'லூ கெஹ்ரிக்' எனும் நோயினால் பாதிக்கப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியை அவரது ஆதரவாளர்கள் ஃபேஸ்புக் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பேட்ரிக் க்வின் குடும்பத்தினருக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

பீட் ஃப்ரேட்ஸ் மற்றும் பேட்ரிக் க்வின் இருவரும் இந்த நோயினால் மரணமடைந்தாலும், இவர்கள் எடுத்த முன்னெடுப்புதான் இந்த நோய்க்கு எதிரான ஆராய்ச்சியை நோக்கி, பலரது கவனத்தைத் திருப்பியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.