Skip to main content

நிலவில் கடல்... கிரிஸ்டல் கிளியர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

Ocean on the moon... NASA released crystal clear photo

 

பூமியில் இருப்பதை விட  மிகப்பெரிய கடல் வியாழன் கோளின் நிலவில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

மனிதனின் தண்ணீர் தேடல் பூமியை மட்டும் விடாமல் கண்ணனுக்கு எட்டிய கோள்களில் எல்லாம் நடந்து வருகிறது. இந்நிலையில் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் வியாழனின் நிலவான யூரோப்பாவில் பூமியில் இருப்பதை விட மிகப்பெரிய கடல் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. சுமார் ஒரு மைல் தடிமன் கொண்ட பனி அடுக்கிற்கு கீழ் உப்புநீர் கொண்ட கடல் இருப்பதாக கண்டறிந்துள்ள நாசா விஞ்ஞானிகள், ஜூனோ என்ற விண்கலம் அனுப்பிய கிரிஸ்டல் கிளியர் புகைப்படங்களை பார்த்து திகைத்துள்ளனர். இந்த காட்சிகள், புகைப்படங்கள் வியாழனின் நிலவான யூரோப்பாவின் மேற்பரப்பிலிருந்து 150 முதல் 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என நாசா குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.