Skip to main content

மூன்று மாத குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி அனுமதித்த ஐநா...

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
baby nz


நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்டெர்ன், தனது குழந்தையுடன் ஐநா சபை கூட்டத்திற்கு வந்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அது என்ன வரலாறு என்றால், குழந்தையுடன் வந்து ஐநா சபையில் கலந்துகொண்ட முதல் பெண் என்பதுதான். இவர் பிரதமராக பதவியில் இருந்தபோதே குழந்தையை பெற்றுக்கொண்டவர். இதுபோன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பிரதமாரக இருந்த போதே குழந்தை பெற்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இவர் வந்தர், அப்போது தனது மூன்று மாத குழந்தையையும் உடன் அழைத்துவந்தார். இவரின் குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என்று ஐநா அடையாள அட்டை வழங்கி சிறப்பு செய்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்