Published on 15/10/2018 | Edited on 15/10/2018

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இவ்விரு தலைவர்களும் அர்ஜெண்டினா நாட்டில் சந்திக்க உள்ளனர்.
இந்த மாதம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்த 19வது உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ள இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினை மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பொருளாதார எதிரிகளாக இருக்கும் ரஷ்யாவும், சீனாவுடனும் இந்தியா நட்பில் இருப்பது உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.