Skip to main content

ஆதரவை விலக்கிக்கொண்ட எம்.கியூ.எம்... சறுக்கும் இம்ரான்கான் அரசு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

MQM withdraws support ... Imran Khan government to shrink!

 

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பெரும்பான்மை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்களுக்கான ஆதரவு தேவைப்படுகிற நிலையில் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று  நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இம்ரான்கான் அரசுக்கு பெரும்பான்மை இருக்காது, இதனால் அரசு கலைக்கப்பட்டுவிடும் என பேசப்பட்டு வந்த நிலையில், இம்ரான்கான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இம்ரான்கான் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவு சரியாக இல்லை எனவும், பாகிஸ்தான் ராணுவத்தினுடைய முக்கிய தலைவர்கள் 'உங்கள் கட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது எனவே நீங்கள் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை' என அறிவுறுத்தி இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சென்ற வாரம் நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.