உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 22 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 14,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

gh

உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகள் கரோனா காரணமாக தங்கள் நாடுகளில் ஊரடங்கை கொண்டுவந்துள்ளது. மேலும் அனைத்து நாடுகளுமே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கிரிஸ் நாட்டில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில்பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. இந்தியாவிலும் அவ்வாறு வைத்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.