Skip to main content

"கச்சத்தீவில் தொய்வுற்ற சைவவழி மரபுகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும்!" - மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

 

இலங்கையிலுள்ள கச்சத்தீவில் அருள்மிகு கயற்கண்ணி திருகச்சேச்சரநாதர் திருக்கோயிலில் மீண்டும் திருப்பணி மற்றும் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய அரசின் உதவியைக் கேட்டுள்ளார் 'காந்தளகம்' பதிப்பகத்தின் உரிமையாளரும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவருமான மறவன்புலவு சச்சிதானந்தன்.

 

இதுகுறித்துப் பேசும் அவர், "கச்சத்தீவில் இருக்கும் கத்தோலிக்க கிருத்துவத்துக்கு மாறாத சைவர்கள், திருகச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் சிவனின் திருமேணியை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இலங்கையிலுள்ள நெடுந்தீவு மீனவர்களுக்கும், தொண்டி முதல் ராமேஸ்வரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்காலமாக இருந்து வருகிறது. நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற தமிழகத்திலிருந்து கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் வந்து போவார்கள்.

 

நெடுந்தீவு மீனவர்கள் கச்சத்தீவில் அந்தோனியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். இதனால் சைவ வழிபாடுகள் முற்றிலும் தொய்வுற ஆரம்பித்தது. பத்தாயிரமாண்டுகளுக்கும் கூடுதலான சைவ வழிபாட்டு மரபுகள் தொய்வுற்றதில் இலங்கையிலுள்ள சைவர்களும், இந்திய சைவர்களும் மிகவும் வருந்தினர். அதனால், கச்சித்தீவிலுள்ள அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதர் திருக்கோயிலைப் புனரமைத்து மீண்டும் அக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கும் நடத்தப்பட வேண்டும். இது நடந்தால், இலங்கையில் வாழும் சைவர்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கும்" என்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். 

 

Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

 

கச்சேச்சரநாதர் திருக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கு நீராட்டும் நடக்க இந்தியப் பிரதமர் மோடியின் உதவியைக் கேட்டுள்ளார் சச்சிதானந்தன். தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், சச்சிதானந்தத்தின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

"தமிழகத்துக்குச் சொந்தமாக இருந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில், கச்சேச்சரநாதர் திருக்கோயில் திருப்பணித் தொடங்கினால் சைவர்களின் மனம் மகிழும். தமிழகத்தின் ஆன்மிகப் பக்தர்களும் ஆனந்த கூத்தாடுவார்கள். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என்கிறார் காயத்ரிரகுராம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் சச்சிதானந்தத்தின் கோரிக்கை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு விவாதிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.