Skip to main content

மரணத்திற்கு பிறகும் நீங்களே பொறுப்பு - தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான் தலைவர்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

taliban supreme leader

 

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி, தங்களது இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் எப்போதும் தலைமறைவாகவே இருக்கும் தலிபான்களின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா, அண்மையில் பொதுவெளியில் தோன்றியதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்தநிலையில் ஹைபத்துல்லா அகுந்த்சாதா, தனது இயக்க தளபதிகளுக்கு ஊடுருவலாளர்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை ஒன்றை விடுவித்துள்ளார். எழுத்துப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ஹைபத்துல்லா அகுந்த்சாதா கூறியுள்ளதாவது, 'படைகளின் மூத்தவர்கள் (தளபதிகள்) அனைவரும், அரசின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் யாராவது தங்களது படைகளில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை அழிக்க வேண்டும்.' இவ்வாறு ஹைபத்துல்லா அகுந்த்சாதா கூறியுள்ளார்.

 

மேலும் அந்த அறிக்கையில், "எந்த தவறு நடந்தாலும், அதற்கு இந்த உலகத்திலும் சரி, மரணத்திற்குப் பிறகான வாழ்விலும் சரி மூத்தவர்களே பொறுப்பேற்பவர்கள்" எனவும் ஹைபத்துல்லா அகுந்த்சாதா அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆப்கானிஸ்தானின் முதல் கார்; மேட் ஆஃப் தாலிபன்ஸ்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Afghanistan's first car; made by Taliban

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் பெண் பத்திரிகையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இவ்வாறு தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது. 

 

தொடர்ந்து ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், தற்பொழுது முதல்முறையாக தாலிபான்களின் உத்தரவின் பேரில் நவீன கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள 'ஆப்கானிஸ்தான் டெக்கினிக்கல் வெகேஷனல்' நிறுவனத்தில் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு இந்த காரை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானால் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. காரை சுற்றி நின்று தலிபான்கள் பெருமை பேசிக்கொள்ளும் காட்சிகள், புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

நேரலையில் தனது சான்றிதழ்களைக் கிழித்தெறிந்த பேராசிரியர்; ஆப்கனில் பதற்றம் 

Published on 28/12/2022 | Edited on 04/01/2023

 

Live, the professor who tore up his certificates; Tension in Afghanistan

 

நேரலை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஒருவர் தனது சான்றிதழ்களை தானே கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடைபெறும் என்று தாலிபன்கள் அறிவித்தனர். இதனால் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு மக்கள் மேல் விதித்தது.

 

குறிப்பாக, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். தொடக்கக் கல்வியில் பெண்களுக்கு அனுமதி அளித்தும் மேல்நிலைக் கல்வியை மறுத்தனர். பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாகச் செல்வதற்கும் தடை விதித்தனர். தாலிபான்களின் செயலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

 

 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காபூல் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கலந்து கொண்டார். நேரலையில் ஒளிபரப்பப்பட்ட அந்த விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் பேராசிரியரும் தங்களது வாதங்களை முன்வைத்துப் பேசி வந்தனர். தொடர்ந்து பேசிய பேராசிரியர் தான் உடன் கொண்டு வந்திருந்த தனது டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை நேரலையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.  

 

மேலும் பேசிய அவர், “எனது சகோதிரிகளுக்கு கல்வியில் இடம் இல்லை என்கிறபோது என்னால் மட்டும் எப்படி இந்தக் கல்வி முறையை ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கூறினார். ஒரு பேராசிரியர் தனது சான்றிதழ்களை தானே கிழித்துப் போட்டது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.