Skip to main content

“மீண்டும் அவரை இழக்க மனமில்லை”- கணவரின் அஸ்தியைச் சாப்பிடும் வினோத பெண்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

"I don't want to lose him again" - Strange woman eating her husband's ashes


அமெரிக்காவின் டென்னசியைச் சேர்ந்த கேசி எனும் பெண், சீன் என்பவரைக் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆனால் சிறிது காலத்திலேயே சீன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதன் பின்னர் சீனின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தியை கேசியிடம் கொடுத்தனர். 

 

தன் கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கேசி, அவரது அஸ்தியைச் செல்லும் இடங்களுக்கெல்லாம்  கொண்டு சென்றார். மேலும் தினமும் தூங்கும்போதும் கூட  தனது கணவரின் அஸ்தியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவார். ஒரு நாள் தனது கணவரின் சாம்பலைக் கலசத்திற்கு மாற்றம் செய்யும் பொழுது கேசியின் கைகளில் கணவரின் சாம்பல் சிதறியது. அதனையடுத்து அந்த சாம்பலைத் துடைக்க விரும்பாத கேசி அதனைத் தனது நாவினால் சுவைத்துள்ளார். அதிலிருந்து அந்த சாம்பலைச் சுவைப்பதைக் கட்டுப்படுத்த முடியாத கேசி தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த சாம்பலைச் சுவைக்கத் தொடங்கியுள்ளார். 

 

அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் இவரின் இந்த வினோதமான செயல் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அவர் தெரிவித்ததாவது, “இது (அஸ்தி) என்னுடைய கணவர். அவரை அழிக்க விரும்பவில்லை. அதனால் அவரை சுவைக்க ஆரம்பித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக இந்த செயலை செய்து வருகிறேன். என்னால் அதனை நிறுத்தமுடியவில்லை. அது மணல் போன்று இருந்தாலும் அந்த சுவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் ஏற்கனவே ஒரு முறை இழந்துவிட்டேன். இந்த செயலால் மீண்டும் அவரை இழக்க எனக்கு மனம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் அவர் தனது உடல் எடையில் 19கிலோ குறைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

டிக்கெட் பரிசோதகர் கையைக் கடித்த பெண்; ஓடும் ரயிலில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Woman bites ticket inspector hand in moving train

ரயிலில் டிக்கெட் பரிசோதகரைக் கடித்த இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து நேற்று முன் தினம் விரார் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த ரயில் தகிசர் - மிரோரோடு இடையே சென்றுக்கொண்டிருந்தபோது, அதிரா(26)  என்ற பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ரயில் பெட்டியில் இருந்த சிங் என்ற பெண்ணிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், தனது கணவர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய டிக்கெட்டை காட்டியுள்ளார். ஆனால், இந்த டிக்கெட் செல்லாது என்று கூறிய பரிசோதகர் அதிரா, அடுத்து வரும் மிரா ரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பயணி மிராரோடு ரயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிராவின் கையை கடித்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரா கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் பெண் பயணியை பிடித்து ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பரிசோதகருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் பயணிமீது வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.