Skip to main content

"ஆபத்து அதிகம்..விளைவுகள் கடுமையாக இருக்கலாம்" - ஒமிக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

omicron

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளனர்.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் மேலும் பலநாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும்  ஒமிக்ரானால் ஏற்படும் உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஒமிக்ரானால், கரோனா பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம் எனவும் உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் ஒமிக்ரானால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசிகள் மற்றும் முந்தைய நோய்த்தொற்றுகளால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாதுகாப்பிலிருந்து ஒமிக்ரானின் தப்பிக்கும் திறனை மதிப்பிடுவதற்கு மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாகவும், ஓமிக்ரான் குறித்த முக்கிய தரவுகள் வரும் வாரங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் சிறிய எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், கரோனா பாதிப்புகளை கண்காணித்தல் மற்றும் மரபணு வரிசைமுறை சோதனையை மேம்படுத்துதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளையும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஒமிக்ரான் துணை மாறுபாட்டை கவலைக்குரியதாக அறிவியுங்கள் - ஆய்வை சுட்டிக்காட்டி அமெரிக்க நிபுணர் கோரிக்கை!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corona

 

இந்தியா மற்றுமின்றி  பல்வேறு நாடுகளிலும் அண்மையில் மீண்டும் கரோனா அலை ஏற்பட்டது. இந்த அலைக்கு அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வகை கரோனாவே காரணமாக இருந்தது. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 மாறுபாடு அதிகம் பரவியது.

 

இந்தநிலையில் ஜப்பானில் நடைபெற்ற ஆய்வின் ஒன்றின் முடிவுகள், பிஏ.2 மாறுபாடு ஒமிக்ரானை விட அதிகம் பரவலாம் எனவும், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும், தடுப்பூசி தரும் எதிர்ப்பு சக்தியிலிருந்து பிஏ.2 மாறுபாடு தப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆய்வை சுட்டிக்காட்டியுள்ள முன்னணி பொது சுகாதார நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங், ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2வை கவலைக்குரிய கரோனா வகையாக அறிவிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.