Skip to main content

ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலம்...

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

george floyds funeral


அமெரிக்காவில் காவலர் ஒருவரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
 


அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட நான்கு காவலர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்திற்குப் பிறகு ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் ஹூஸ்டனில் அவரது தாயாரின் உடலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு குறித்துப் பேசியுள்ள ஜார்ஜ் ஃபிளாய்டின் சகோதரி, "உலகம் முழுவதும் ஜார்ஜ் ஃபிளாய்ட் நினைவு கூரப்படுவார். அவர் இந்த உலகை மாற்றுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை: குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்... வரவேற்ற குடும்பத்தினர்!  

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

DEREK CHAUVIN

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகரப் போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக மினியாபோலிஸ் நகர நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, மினியாபோலிஸ் நகர நிர்வாகம் ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு இழப்பீடாக 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இது இந்திய மதிப்பில் 196 கோடியாகும். இதற்கிடையே ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டது குறித்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட டெரிக் சாவில் என்ற பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை நீதிமன்றம் ஏற்கனவே குற்றவாளியாக அறிவித்திருந்தது.

 

இந்தநிலையில் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெரிக் சாவிலுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இந்தச் சிறை தண்டனை, உங்கள் பதவி மீதான நம்பிக்கை மற்றும் அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும், ஜார்ஜ் ப்ளாய்ட்டுக்கு நீங்கள் காட்டிய கொடூரத்தையும் அடிப்படையாக கொண்டது" என நீதிபதி டெரிக் சாவிலிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் ப்ளாய்ட்டின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். 

 

 

Next Story

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது!  

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

darnella frazier

 

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்களும் ஆதரவளித்ததோடு, ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் எடுத்த அந்த வீடியோவே உலகம் முழுவதும் பரவி, அமெரிக்காவில் போராட்டம் வெடித்ததற்கும், உலக முழுவதும் அதற்கு ஆதரவு எழுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

 

இந்தநிலையில், டார்னெல்லா ஃபிரேசியருக்கு சிறப்பு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளில் வழங்கப்படும் உயரிய விருதாக புலிட்சர் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.