Skip to main content

கரோனா மூன்றாவது அலை: ஒருமாத ஊரடங்கை அமல்படுத்தும் நாடு! 

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

LOCKDOWN

 

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும் கரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே கரோனாவின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட அந்த நாட்டில், தற்போது மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

 

இதனையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும், கடந்த 19 ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு இலகுவான கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால், இலகுவான கட்டுப்பாடுகளைக் கொண்ட இந்த ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். 

 

இந்த ஊரடங்கில், மூன்றுவார காலத்திற்குப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை மக்கள், தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யலாம். அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்