இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சமந்தா ரேயான். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி நடந்தது. கண்ணனைத் திருமணம் செய்து கொண்டது முதல் தமிழ் மீது இவருக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படத்துவங்கியது. இவர் தொடர்ந்து தமிழ் படிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். குறிப்பாகத் தமிழ் சினிமா பாடல்கள் மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் நீதானே என்ற பாடலை இவர் பாடி வெளியிட்ட வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரலாகியது. இந்த வீடியோவை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.

Advertisment

Advertisment

இந்நிலையில் இவர் தற்போது பழைய தமிழ் திரைப்படமான பாசமலர் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மலர்ந்தும் மலராத என்ற பாடலை பாடி ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது மிக வைரலாக பரவி வருகிறது. பல்லாரயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து இவரைப் பாராட்டி வருகின்றனர்