Skip to main content

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே புகழ் பெற்ற  WWE வீரர் மரணம்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

அமெரிக்காவில் பிரபலாமன WWE போட்டிகளை நம் இந்தியாவிலும் அதிகமாக சிறுவர்கள்,இளைஞர்களால் கவரப்பட்டு பார்த்து  வருகின்றன. இந்நிலையில் இந்த WWE போட்டியில் பங்குபெற்று புகழ் பெற்றவர் சில்வர் கிங் எனும் மெக்ஸிகோவை சேர்ந்த ரெஸ்லிங் வீரர். இவரின் இயற் பெயர் சீசார் குவாட்மேமோக் கோன்சலாஸ் பாரோன். தற்போது 51 வயதான சில்வர் கிங், லண்டனில் நடந்த போட்டியில் ஜுவெண்டட் குரேராவுக்கு எதிராக நேற்று போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியின் போது திடீரென சில்வர் கிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் போட்டி நடந்த மேடையிலேயே உயிரிழந்தார். 
 

whristler



முதலில் அனைவரும் அவர் அமைதியாக படுத்திருப்பது போட்டியின் போது நடக்கும் விஷயங்களில் ஒன்று என நினைத்தனர். ஆனால் வெற்றி பெற்ற ஜுவெண்டட் சில நிமிடங்கள் வரை கொண்டாடி முடித்த பின்னரும்  நகராமல் மேடையில் படுத்து  கிடந்ததை பார்த்து போட்டி நடுவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதித்த பயிற்சியாளர்கள் சில்வர் கிங் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் கடும் சோகத்தில் மூழ்கினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்