Skip to main content

மெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

dubai princess haya gives gifts of 12 crores to russell flowers

 

 

தன்னுடன் இருந்த உறவு குறித்து வெளியில் யாருக்கும் கூறாமல் இருப்பதற்கு துபாய் இளவரசி தனது மெய்க்காப்பாளருக்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் ஆல் மக்தூமின் ஆறாவது மனைவியான இளவரசி ஹயா, தனது கணவரிடம் இருந்து பிரிந்து லண்டனில் தஞ்சமடைந்த பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் தனது மனைவி வளர்க்கக்கூடாது என பிரிட்டன் உயர்நீதிமன்றம் ஒன்றில் துபாய் மன்னர் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குழந்தைகளை இளவரசி ஹயாவே வளர்க்கலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது, இளவரசி ஹயாவுக்கும் பிரிட்டனில் அவருடைய மெய்க்காப்பாளராக இருந்த ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ் என்பவருக்கும் தொடர்பு இருந்தது குறித்த செய்திகள் வெளிவந்தன. 37 வயதான ரஸ்ஸல் ஃப்ளவர்ஸ், இளவரசி ஹயா இருவருக்குமான உறவு குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னுடன் இருந்த உறவு குறித்து வெளியில் யாருக்கும் கூறாமல் இருப்பதற்கு ஹயா தனது மெய்க்காப்பாளருக்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் பணம் தவிர்த்து விலையுயர்ந்த கடிகாரங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றையும் இளவரசி ஹயா வழங்கியுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.