Skip to main content

கலங்கடித்த ஒற்றை குப்பி; நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

 Disturbed single vial; Australia breathed a sigh of relief

 

'ரியோ டின்டோ' என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் நடைபெறும் பொழுது கிடைக்கும் கனிமத்தின் தன்மையை அளவிடுவதற்காக சிறிய அளவிலான கதிரியக்க தனிமங்கள் கொண்ட குப்பிகளை அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

 

சிசியம்-137 என்ற கதிரியக்க தனிமம் உள்ள அந்த குப்பி மிகவும் ஆபத்தானது. இந்த தனிமத்தின் கதிரியக்கம் மனித மற்றும் விலங்குகளின் உடலில் நேரடியாக பட்டால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தீக்காயங்களையும் ஏற்படுத்தும். இதனால் கேன்சர் உள்ளிட்ட ஆபத்துகள் கூட வரலாம் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

 

கடந்த 12 ஆம் தேதி இந்த கதிரியக்க குப்பிகள் உள்ளிட்ட சுரங்கப் பணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சேமிப்பு கிடங்கிற்கு ரியோ டின்டோ நிறுவனத்தின் ட்ரக்குகள் சென்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்வரா பகுதியிலிருந்து 1400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெர்த் நகருக்கு ட்ரக்குகள் சென்று, அங்குள்ள நிறுவனத்தின் கிடங்கில் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட பொருட்களை பிரித்துப் பார்த்தபோது அதில் வைத்திருந்த கதிரியக்க குப்பிகளில் ஒன்றை மட்டும் காணவில்லை. மிகவும் ஆபத்து என்பதால் பதற்றமடைந்த ரியோ டின்டோ நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோரிகுண்டு அளவிலான குப்பி என்றாலும் ஆபத்து பெரியதென்பதால் உடனடியாக இதற்காக தேடுதல் குழு அமைக்கப்பட்டு ட்ரக் சென்ற வழியில் தேடுதல் நடத்தப்பட்டது. சாலையோரத்தில் இறங்கி நவீன கருவிகளைக் கொண்டு குப்பி பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டது ஆஸ்திரேலியா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.