Skip to main content

'டெல்டாக்ரான்...' அதிர்ச்சி தரும் புது கண்டுபிடிப்பு...

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

'Deltacron ...' is a shocking new virus

 

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தினசரி கரோனா பாதிப்பு, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது. இந்த 3,623 பேரில் 1,409 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு 2,214 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உலக நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 'டெல்டாக்ரான்' என்ற பெயரில் மற்றொரு வைரஸின் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக அளவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸ் நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கலந்த ஒரு புதிய மாறுபாட்டைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் மேற்கொண்ட ஆய்வின்படி இதுவரை 25 பேர் இந்த புதிய திரிபால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த 'டெல்டாக்ரான்' மாறுபாடு மிகவும் ஆபத்தானதா இல்லையா என்பது போகப் போகத் தான் தெரியும் என்கிறார் பேராசிரியர் லியோண்டியோஸ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சிங்கப்பூரில் பரவும் உருமாறிய கொரோனா தொற்று' -அமைச்சர் மா.சு பேட்டி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Transformed corona infection spreading in Singapore' - Minister M. Su interview

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா என்றும்; ஆல்பா  என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.

Next Story

செத்து மடியும் கடல் சிங்கங்கள்; அச்சத்தில் பிரேசில்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
dying sea lions; Brazil in fear

கடல் சிங்கங்கள் அதிகப்படியாக உயிரிழப்பது பிரேசிலில் சுகாதார அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான கடல் சிங்கங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்து கிடந்த கடல் சிங்கங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு அதன் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 942 கடல் சிங்கங்கள் பறவை காய்ச்சலால் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும், மற்ற விலங்குகளுக்கும் பரவும் என்பதால் உடனடியாக கடல் சிங்கங்களை புதைக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலானது கடல் சிங்கங்களின் நரம்பு மண்டலத்தினை நேரடியாக தாக்குவதால் உடனடி உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் சிங்கங்கள் மட்டுமல்லாது சில கடற்கரை பகுதிகளில் பென்குயின்களும் உயிரிழந்து கிடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வைரஸ் பரவல் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பிரேசில் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.