/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsg_5.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 81 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 9000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. வைரஸ் பாதிப்புக்கு முதலில் ஆளான நாடான சீனா கடந்த சில வாரங்களாக தொற்று இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றுக்கு சீன மக்கள் ஆளாகியுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் 67 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் பெய்ஜிங் இந்த முறை நோய் தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருக்கின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)