Skip to main content

மீண்டும் அதிகரிக்கும் கரோனா; அச்சத்தில் சீன மக்கள்  

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

corona again curfew china

 

உலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான உயிர்ப் பலிகளை வாங்கிய கரோனா வைரஸை எளிதில் யாராலும் மறக்க முடியாது. உலகில் முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கரோனா வைரஸ், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி ஏராளமான மரணங்கள், ஊரடங்கு, பொருளாதார முடக்கம் எனப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு முகக்கவசம், தடுப்பூசி எனப் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றி படிப்படியாகக் கரோனா தொற்று குறைந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கிறது. 

 

இந்நிலையில், சீனாவில் கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதனால், சீனாவில் உள்ள பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்து வந்த கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிப்பதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்