Skip to main content

முதல் கரோனா பாதிப்பை உறுதிசெய்த நாடு !

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

cook islands

 

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா, கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கி, அதன்பின்னர் படிப்படியாக உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. இந்தநிலையில் தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான குக் தீவுகள், தங்கள் நாட்டின் முதல் கரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது.

 

மீட்பு விமானம் மூலம் குடும்பத்தினருடன் நாடு திரும்பிய 10 வயது சிறுவனுக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குக் தீவுகளின் பிரதமர் அறிவித்துள்ளார். குக் தீவுகள் சுற்றுலா பயணிகளைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுமார் 17,000 மக்கள் வசிக்கும் குக் தீவுகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான மக்களில் 96 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8013 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 16,765 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா சதவீதம் 1.11 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

6 முதல் 8 மாதங்களில் அடுத்த கரோனா அலை - மருத்துவ நிபுணர் கணிப்பு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 16 ஆயிரத்து 51 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இன்று 13,405 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தேசிய கரோனா பணிக்குழுவின் இணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், 6 முதல் 8 வாரங்களில் அடுத்த கரோனா அலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், “வைரஸ் நம்மை சுற்றி இருக்கப்போகிறது. இன்னொரு புதிய வகை கரோனா மாறுபாடு பரவும்போது ஒரு கரோனா அலை ஏற்படும். அது எப்போது என நமக்கு தெரியாது. ஆனால் ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை புதிய வகை கரோனா பரவுகிறது என வரலாறு கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் தற்போது அதிகம் பரவி வரும் ஒமிக்ரானின் துணை மாறுபாடு பிஏ.2, இன்னொரு கரோனா அலையை ஏற்படுத்தாது எனவும் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.