Skip to main content

ஏழையாக இறக்க விரும்பும் கோடீஸ்வரர்... 59,000 கோடி ரூபாய் சொத்துகளைத் தானமளித்தார்...

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

chuck feeney donates his entire fortune

 

 

ஏழையாக இறக்க விரும்புவதாக தெரிவித்திருந்த பிரபல தொழிலதிபர் சக் ஃபீனி, தனது சொத்துகள் முழுவதையும் தானமாக வழங்கியுள்ளார். 

 

89 வயதான சார்லஸ் சக் ஃபீனி,1960 ஆம் ஆண்டு ராபர்ட் மில்லர் என்பவருடன் இணைந்து டூட்டி ஃப்ரீ ஷாப்பர் கடைகளைத் திறந்தார். தொடர் உழைப்பின் பலனாக பல நாடுகளில் தங்களது வணிகத்தை விரிவு செய்த இவர்கள் அமெரிக்காவின் முக்கிய பணக்காரர்களாகவும் மாறினர். ஆரம்பகாலகட்டம் முதலே மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஃபீனி, மிகப்பெரிய அளவிலான தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்கி வந்தார். மேலும், தான் இறக்கும் போது ஏழையாக இருக்க விரும்புவதாகவும் இவர் தெரிவித்திருந்தார்.

 

இவர் இதுவரை குழந்தைகளின் கல்விக்கு மட்டும் சுமார் 3.7 பில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அல்மா மேட்டர் கார்னலுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மற்றும் வியட்நாமில் சுகாதாரத்தை மேம்படுத்த 270 மில்லியன் டாலர் எனப் பல உலக நாடுகளுக்கும் இவர் தொடர்ந்து உதவி வந்தார். பில்கேட்ஸ், வாரென் ஃபபெட் உள்ளிட்ட பல கோடீஸ்வரர்களுக்கும் தானமளிப்பதில் முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர் இவர். 40 ஆண்டுகாலமாக நன்கொடை வழங்கிவந்த இவர், ஏழையாக இறக்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், தனக்கு சொந்தமான 58,888 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகள் வழியாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டும் தனக்காகவும் தனது மனைவிக்காகவும் வைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு சிறிய வீட்டில், தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். இந்த நன்கொடைகள் பற்றி பேசியுள்ள அவர், "நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். நாங்கள் சில விஷயங்களை வித்தியாசமாக செய்தோம். ஆனால் இதனால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எனது காலகட்டத்திலேயே இதைசெய்து முடிப்பதைப் பற்றி நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த அனைவருக்கும் எனது நன்றி. வாழும்போது கொடுப்பதை பற்றி யோசிப்பவர்கள் அனைவரும் இதை முயலவும், நீங்கள் கண்டிப்பாக இதனை விரும்புவீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

 Ambani becomes Asia's richest man!

 

தொழிலதிபர் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.

 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். அம்பானியின் கடந்தாண்டு சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இந்தாண்டு 24 சதவிகிதம் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அம்பானிக்கு அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி நிறுவனத்தின் கவுதம் அதானி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக உள்ளது. கடந்தாண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நைகா நிறுவனர் ஃபால்குனி  நாயர் பில்லியனர் வரிசையில் இணைந்துள்ளார்.

 

 

Next Story

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்கேட்ஸ் - மெலிண்டா!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

bill gates- melinda

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவரும் மெலிண்டாவும் 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

 

இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும்  மெலிண்டாவும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்தது.

 

இந்தநிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.