Skip to main content

பார்க்கும் இடமெல்லாம் நண்டுகள்... பாதை அமைத்து கொடுத்த அரசாங்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Christmas Island Millions red crab

 

ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவு சிவப்பு நிற நண்டுகளால் வண்ணமயமாகவும், ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது. 

 

காடுகளில் வசிக்கும் சிவப்பு நிற நண்டுகள், இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு இடம் பெயர்தலை வழக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள்தான் நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம். அதனால் சிவப்பு நிற நண்டுகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காகக் கடலுக்கு இடம் பெயர்ந்து, அங்கு முட்டையிட்டு, மீண்டும் தனது வசிப்பிடமான காட்டிற்குத் திரும்புவதை வழக்கமாக வைத்து வருகிறது. 

 

அப்படி நண்டுகள் இடும் முட்டைகள் பாதி மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகிவிடும்.  மீதமுள்ள முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்து தனது இருப்பிடமான காட்டிற்குச் செல்லும்.  அந்த வகையில், தற்போது நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம் என்பதால் சிவப்பு நிற நண்டுகள் கடலை நோக்கி படையெடுத்து வருகிறது. 

 

Christmas Island Millions red crab

 

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் லட்சக்கணக்கான நண்டுகள் இடம்பெயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு நண்டுகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நண்டுகள் இடம் பெயர்தலுக்காகப் பாதை அமைத்துள்ளது. மேலும், ஏராளமான சிவப்பு நண்டுகள் சாலையிலும் பயணிப்பதால் அங்கு சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு லட்சக்கணக்கான நண்டுகள் ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்வதைப் பார்த்துக் கண்டுகளித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.