Skip to main content

300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்... அவர் கூறிய காரணத்தால் ஆச்சர்யமடைந்த அதிகாரிகள்...

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
priest


 

பிரேசிலில் மதபோதகர் ஒருவர் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரேசிலில் ‘கடவுளின் தூதர்’ என்று அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் மதபோகராகவும், மனநல டாக்டராகவும் பனியாற்றி வருகிறார். இவர் ஆன்மீக ரீதியில் மனநல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக்கூறி இவர் மீது சில மாதங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரேசில் போலீசார் அந்த மதபோதகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.  30-க்கும் மேற்பட்டவர்களின் ஆவி என்னுள் புகுந்து விட்டது. அதனால்தான் நான் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தேன் என அவர் கூறியுள்ளார். பின் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்