Skip to main content

பிரேசிலில் வெடித்த கலவரம்; முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் வெறிச்செயல் 

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

brazil former president supporters issue supreme court parliament 

 

பிரேசிலில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் போராட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றம், அதிபர் மளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அங்குள்ள பொருட்களைச் சூறையாடிய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வலதுசாரி தலைவரும் அப்போதைய அதிபருமான ஜெயிர் பொலிஸானரோ தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் தனது தோல்வியை ஏற்காத ஜெயிர் பொலிஸானரோ தேர்தலின்போது நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி குற்றம்சாட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலை ரத்து செய்யக் கோரி  பொலிஸானரோவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுவது, வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

 

இதற்கிடையே பிரேசிலின் அதிபராக மூன்றாவது முறையாக, இடதுசாரிகளின் தலைவர் இனாசியோவ் லுலா சில்வா கடந்த வாரம் பதவியேற்றார். இந்நிலையில் மீண்டும் ஜெயிர்  பொலிஸான்ரோவை அதிகாரத்திற்கு கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். நேற்று முன்தினம் பிரேசிலின் தலைநகரான பிரசிலியாவில் உள்ள பொலிஸான்ரோவின் ஆதரவாளர்கள்  போலீசாரின் தடுப்பு வேலிகளையும் மீறி நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், மேஜை நாற்காலிகளையும் அடித்து நொறுக்கினர். பின்னர் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரம் குறித்து பிரேசில் அதிபர் இனாசியோவ் லுலா சில்வா, “இது பாசிசவாதிகளால் நடத்தப்பட்ட கலவரம்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அதிபர், " இந்த கலவரத்துக்கு, தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சுமார் 200 பேரை போலீசார் கைது செய்ததாக பிரேசில் நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தக் கலவரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ. நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ், இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிவர்லி ஆகியோர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அந்த ஏழு பேரின் நோக்கமும் என்னை...'- உதற வைக்கும் ஜார்கண்ட் சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

ஸ்பெயினை சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், சாகச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதும் அண்மையாவே அதிகரித்து வரும் நிலையில், பிரேசிலை சேர்ந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். தாங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்கள் தொடர்பான விவரங்களையும், தங்களுடைய சாதனைகளையும் அவ்வப்போது அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதுவரை இத்தாலி, ஈரான் என பல நாடுகளுக்கு சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்த இவர்கள் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள், லடாக், காஷ்மீர், ஹிமாச்சல்பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் தலங்களை பார்த்ததோடு, இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட சாகச பயணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், வெளிநாட்டவர் இருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில் குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு அந்த ஸ்பெயின் தம்பதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எங்களுக்கு நடந்ததுபோல் யாருக்கும் நடக்க கூடாது. ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். எங்களை அடித்து துன்புறுத்தியதோடு எங்களிடமிருந்த உடைமைகளை கொள்ளையடித்தனர். அவர்களின் நோக்கம் எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவே இருந்தது. இந்த சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது' என உலக மக்களுக்கு பேரறிவிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.