Skip to main content

'ஆப்பிள்' நிறுவனத்தின் புதுவரவை வறுத்தெடுத்த 'சாம்சங்' மற்றும் 'சியோமி'!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Apple iphone 12 samsung


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதுவரவான ‘ஐஃபோன் 12’ மாடலை வெளியிட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஃபோனுடன் ஜார்ஜர், ஹெட் செட் என எதுவும் வராது. வெறும் ஃபோன் மட்டுமே கிடைக்கும் என அறிவித்தது அந்நிறுவனம். 

 

இதனைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘உங்கள் கேலக்ஸி நீங்கள் எதிர் பார்ப்பதைக் கொடுக்கும். அடிப்படையான ஜார்ஜர், கேமரா, பேட்டரி உள்ளிட்ட ஸ்மார்ட் ஃபோனுக்குத் தேவையான அனைத்தும்’ எனப் பதிவிட்டது.


அதேபோல், சியோமி நிறுவனம் சமீபத்தில் அதன் புதுவரவான ‘எம்.ஐ.10 டி.ப்ரோ’ மாடலை வெளியிட்டது. அந்த ஃபோனை பதிவிட்டு அதன் கீழ் ‘எம்.ஐ.10 டி.ப்ரோ’ பெட்டியில் நாங்கள் எதையும் விடவில்லை அனைத்தையும் பேக் செய்திருக்கிறோம் எனப் பதிவிட்டது. 

 

இவை மட்டுமின்றி ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ‘ஒன் ப்ளஸ் 8டி’ அதன் ஜார்ஜருடன் வருகிறது என அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்தின்  ‘ஐஃபோன் 12’ மாடலுடன் அதன் ஜார்ஜர், ஹெட் செட் இல்லை எனும் அறிவிப்பு பல்வேறு தரப்புகளிலும் சிறு அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சில ஆப்பிள் பிரியர்கள் மத்தியிலும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேவேளையில், ஆப்பிளின் போட்டி நிறுவனங்கள் அந்த அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி விளம்பரம் செய்துவருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சார்ஜர் இல்லாமல் ஐ போன்... ஆப்பிளுக்கு 19 கோடி அபராதம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

 iPhone without charger... Apple fined 19 crores!

 

சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.

 

சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

Next Story

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Apple's new iPhone 13 is ready in Chennai!

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.  

 

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.