Skip to main content

விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து ஆபத்தான பயணம்... நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்த இருவர்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

Afghanistan kabul airport peoples us airforce flight

 

இந்த நிலையில், ஆப்கானை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் நகரப் பேருந்துகளுக்கு முண்டியடிப்பது போல் பலர் விமானத்தில் ஏற முயற்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சில சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் வெளியான ஒரு வீடியோவில், விமானத்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற இருவர் நடுவானிலிருந்து கீழே விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

காபூலில் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க முடியாத மக்கள் விமானத்தைப் பின் தொடர்ந்தனர். இதில், இருவர் விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த இருவர், வானிலிருந்து கீழ் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உலக மக்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. 

 

Afghanistan kabul airport peoples us airforce flight

 

இதே போன்று, மற்றொரு விமானத்தின் மீது பேருந்தில் அமர்வது போல் விமானத்தின் மேல் கூரையில் மக்கள் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. 

 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலைநகரில் உள்ள காபூல் விமான நிலையம் அமெரிக்கப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உலக நாடுகளின் பார்வை ஆப்கானிஸ்தான் பக்கம் திரும்பியுள்ள போதும், தங்களைக் காக்க எந்த நாட்டினராவது உதவ மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆப்கான் மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.