Skip to main content

23 கேரட் 'தங்க பிரியாணி' - ஒரு பிளேட் எவ்வளவு தெரியுமா?

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

 23 carat gold biryani ... do you know how much is a plate?

 

'பிரியாணி' எனும் உணவு வகை உலகம் முழுதுவம் பிரசித்திபெற்ற ஒன்று. அதேபோல் மக்களால் அதிகம் விரும்பும் அசைவ உணவில் ஒன்று. அசைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல சைவ பிரியர்களின் பிரியாணி மோகத்தை தீர்க்கவும் வெஜிடபிள், மீல் மேக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிரியாணி உணவு தயாரிக்கப்படுகிறது. பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றியது. அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் பிரியாணி தெற்காசியாவுக்கு வந்தது. பிரியாணி என்னும் சொல் ‘வறுத்த’ என்ற பொருள்படும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. ஆனால் இன்று நாம் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவைக் குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள்.

 

 23 carat gold biryani ... do you know how much is a plate?

 

தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் பிரியாணியை விரும்பி உண்கிறார்கள். இந்நிலையில் உலகிலேயே விலையுயர்ந்த பிரியாணி ஒன்றை உணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. துபாயில் இயங்கிவரும் 'பாம்பே போரோ' எனும்  ரெஸ்டாரெண்டில் ‘ராயல் பிரியாணி’ என்ற பெயரில் தங்க பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரியாணியில், சாப்பிடக் கூடிய 23 கேரட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. 'பாம்பே போரோ' ரெஸ்டாரெண்டின் முதல் வருட கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிரியாணியின் விலை 270 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு பிளேட் தங்க பிரியாணி வாங்கினால் 6 பேர் தாராளமாக சாப்பிலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

உலகின் பல பணக்கார்கள் அதிக நாள் வாழ தங்க பஸ்பம் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். இனி அந்த பட்டியலில் இடம்பெறப்போவது தங்க பிரியாணியும்தான் போல... 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.