A youth who went to Velliangiri mountain was lose their live

Advertisment

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற இளைஞர்நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளனர். அப்பொழுது அதிகாலை ஐந்து மணிக்கு ஆறாவது மலையை அடைந்து நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, பனிப்பொழிவு ஏற்பட்டது. திடீரென தமிழ்ச்செல்வன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வெள்ளியங்கிரி மலை ஏற சென்ற இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.