Skip to main content

இரவல் தர மறுத்ததால் பைக்கை கொளுத்திய இளைஞர்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

youth set the vehicle on fire

 

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள சிதம்பரம் சாலை பகுதியில் வசித்து வருபவர் பஷீர் என்பவரது மகன் 23 வயது பக்ருதீன். அதே ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அடி பள்ளம் தெருவில் வசித்து வருபவர் இதயத்துல்லா என்பவரது மகன் 18 வயது உவைஸ் முகமது.  இவரது வீட்டுக்கு முன்பு இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனமும், இவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரது வாகனமும் என இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் விடிகாலை நேரத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இரவு நேரம் என்பதால் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிக வெளிச்சம் பரவியதை அடுத்து வீட்டிலிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு வாகனங்களும் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்ததை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து போக, மற்றொரு வாகனம் பாதி அளவு எரிந்த நிலையில் அணைக்கப்பட்டது.

 

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து செய்துள்ளனர். பக்ருதீன் சம்பவத்தன்று விடியக் காலை மூன்று மணி அளவில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உவைஸ் முகமது வீட்டுக்குச் சென்று காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு மீண்டும் சுவர் ஏறிக் குதித்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது. 

 

அதன் அடிப்படையில் பக்ருதீனை கைது செய்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உவைஸ் முகமதுவிடம் இருசக்கர வாகனத்தை பக்ருதீன் இரவல் கேட்டுள்ளார். ஆனால் உவைஸ் முகமது தர மறுத்துவிட்டதால் கோபத்தில் இருவாகனங்களைக் கொளுத்தியதாக பக்ருதீன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆடு திருட்டு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் அவர் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பதால் உவைஸ் முகமது தனது வாகனத்தைத் தராமல் மறுத்துள்ளார் வாகனம் தர மறுத்ததற்காக அந்த வாகனத்தை இரவு நேரத்தில் சென்று தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் ஜெயங்கொண்டம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.