Skip to main content

காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞர் வெட்டிக் கொலை

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Youth passes away in thirupatur police arrested father and son

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்(22). இவர் பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் பணிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர், வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில், தான் வளர்த்து வரும் காளைக்குத் தீவனம் வைத்துவிட்டுத் திரும்பியுள்ளார். அப்போது ஜெயபிரகாஷை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த அவரைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. புஸ்பராஜ், டி.எஸ்.பி சரவணன் மற்றும் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். 

 

ஜெயபிரகாஷின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல்துறையினரிடம் ‘கொலையாளியை கைது செய்யும் வரை சடலத்தை கொடுக்கமாட்டோம்’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 3  மணி நேரத்திற்கும் மேலாக  அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இளைஞரை வெட்டிவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதி அளித்த பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

அதன்பின் சடலம் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயபிரகாஷ், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? காதல் பிரச்சினையா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என போலீஸார் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு, கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மகன் மாணிக்கம் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

ராஜ்குமார் என்பவர் சீட்டு நடத்தியுள்ளார். ஜெயபிரகாஷ் குடும்பத்தார் அந்த சீட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், சீட்டு பணத்தை தவணை முடிந்தும் ராஜ்குமார் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் அவரது தந்தை மோகன் இருவரும் ராஜ்குமாரிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அங்கு இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு சிறு அடிதடி ஆகியுள்ளது. இந்த கோபத்தில் ராஜ்குமார் மகன் மாணிக்கம், ஜெயபிரகாஷை வெட்டிக் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மாணிக்கத்தின் தந்தை ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.