Skip to main content

இளைஞர் மரணம்.... காவல்துறையினர் தீவிர விசாரணை!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

youth incident cuddalore district police investigation

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ளது செவ்வேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயக் கூலி தொழிலாளி ராஜேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பிரேமலதா என்பவருக்கும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொளார் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது விஜயலட்சுமி சபிதா, என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ராஜேஷ். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ராஜேஷ், வேப்பூர் பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் அங்கு வேறு ஒருபெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் இரண்டாவது மனைவி விஜயலட்சுமி சபிதா, ராஜேஷ், ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு விஜயலட்சுமி சபிதா தாய் வீடான தொளாருக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சல் காரணமாக, ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதையடுத்து தற்கொலை செய்துக் கொண்ட ராஜேஷு உடலை அவரது உறவினர்கள், நேற்று மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்து  உடலை எறிவூட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த விஜயலட்சுமி சபிதாவின் தந்தை சுப்பிரமணியன் திட்டக்குடி காவல் நிலையத்தில் ராஜேஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், செவ்வேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயானத்தில் ராஜேஷ் உடலை எரியூட்டுவதற்கு தீ வைக்க உறவினர்கள் முற்பட்டனர். இதைக் கண்ட காவல்துறையினர் ராஜேஷ் உடலை ஏறியூட்டாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், ராஜேஷ் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திட்டக்குடி காவல்துறை டி.எஸ்.பி. காவியா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

அதன் பிறகு, ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திட்டக்குடி காவல்துறையினர், ராஜேஷ் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.