Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

 youth arrested POCSO Act Cuddalore
கோப்புக்காட்சி

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த கிச்சான் என்பவரது மகன் செந்தில்(27).  இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இந்த நிலையில் அவரது ஊர் அருகே உள்ள ஆவட்டி கைகாட்டியில் உள்ள ஓட்டலில் திண்டுக்கல் மாவட்டம் மேலத்தின்பட்டியைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லும்போது அந்தப் பெண்ணுக்கும், செந்திலுக்கும் ஏற்பட்ட அறிமுகம் திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு செந்தில் தனது பெண் தோழியை பெரங்கியும் என்ற கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அங்கு செந்தில் அடிக்கடி சென்று அவருடன் பழகி வந்துள்ளார்.  அந்த பெண் தோழிக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் வேலை செய்ய, மகள் மட்டும் தாயுடன் வசித்து வருகிறார். 

 

இந்த நிலையில் பெண் தோழியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் செந்தில்,   “பெண் தோழியின் மகளிடம் நான் உன்னை விரும்புகிறேன், என்னுடன் நீ நெருங்கி பழக்க வேண்டும்” என வற்புறுத்தியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, உடனே இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு செய்வதறியாமல் தவித்து வந்த சிறுமியின் தாயை, செந்தில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று  “உனது மகளை நான் விரும்புகிறேன். அவள் என்னோடு நெருங்கி பழக நீ அவளை வற்புறுத்த வேண்டும். அவளை நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன்” என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு செந்தில் பாலியல் தொல்லை கொடுக்க, அதை தாங்க முடியாத அவர்  மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு காவலரின் தொடர்பு எண்ணுக்கு போன் செய்து தனக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். 

 

இதைக் கேட்ட போலீசார் உடனே திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமிக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் உடனடியாக சக பெண் போலீசார் உடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அந்த சிறுமியை மீட்டதோடு அக்கம்பக்கத்தினர்களிடம் விசாரணை நடத்தி சம்பவம் உண்மை என்பதை கண்டறிந்து, செந்தில் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.