Skip to main content

போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள்...கஞ்சா செடியை பயிரியிட்ட அவலம்...!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரேம்குமார், புதுப்பட்டி ராஜ்குமார் மகன் சடையாண்டி, நாகயம்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் சபரீஸ்வரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் ராம்ஜி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்களின் நண்பர் இருவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

 

Youth addicted to cannabis near dindigul    ​

 



தினசரி விலை கொடுத்து கஞ்சா  வாங்கி சிகரட்டில் ஏற்றி குடிப்பதற்கு பதிலாக நாமே கஞ்சாவை பயிரிடலாம் என முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இவர்கள் புதுப்பட்டி பாண்டி குளம் கரையோரம் கழிவுநீர் வாய்க்கால் அருகே சுமார் இரண்டரை சென்ட் அளவுக்கு கஞ்சாவை பயிரிட்டு இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கஞ்சாவை பயிரிட்டு குடம் மூலம் தண்ணீர் எடுத்து கஞ்சா செடிகளுக்கு
 ஊற்றி வந்தனர். 

இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் செம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா செடிகளை வேரோடு பறித்து செம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இப்படி பறிக்கப்பட்ட கஞ்சா செடியின் எடை ஆறு கிலோவுக்கு மேல் இருந்தது.

இதையடுத்து கஞ்சா பயிரிட்ட பிரேம்குமார், சடையாண்டி, சபரீஸ்வரன், ராம்ஜி ஆகிய 4 பேரை செம்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் இப்படி இளைஞர்கள் தைரியமாக கஞ்சா பயிரிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.