Skip to main content

“நான் ஆண்தான் என அரசு அறிவிக்க வேண்டும்!” ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

youngster given petition to the kanyakumari collector office

 

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான மனிதர்களையும் கண்டு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல வழக்காடும் நானும் புதுமையானவன் அல்ல" என பராசக்தி படத்தில் கோர்ட் சீன் ஒன்றில் சிவாஜி கணேசன் இப்படிச் சொல்லுவார். அதேபோல்தான், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்த இளைஞர் ஒருவர், கல்குளம் தாலுக்கா மருந்துக்கோட்டையைச் சோ்ந்த சந்தோஷம் மகன் ஸ்டாலின் சிங் (28) எம்.சி.ஏ பட்டதாரியான நான், ஆண்மையுள்ள ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டும். மேலும், என்னைக் கேலி செய்தவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். 


ஸ்டாலின் சிங் ஏன்? எதற்காக இப்படி ஒரு மனு கொடுத்தார் என்று அவரிடம் பேசினோம். அவர், "நான் பள்ளி கல்லூரி படிக்கும் போதே, நன்றாகப் படிக்கும் மாணவன். மேலும், எல்லோரிடமும் நன்றாகப் பேசும் குணமுடையவன். என்னுடைய பேச்சின் நலினத்தையும் நடவடிக்கைகளையும் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், என்னை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். இவர்களால் நான் செல்கிற இடமெல்லாம் என் மனம் பாதிக்கும் அளவுக்கு நடந்துவந்தது.


இந்த நிலையில், நான் எம்.சி.ஏ படிப்பு முடித்ததும், பல தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தது. அங்கு வேலைக்குச் சென்றால் சக ஊழியா்களும் நண்பா்களும் திருநங்கை என்றே என்னை அடையாளப்படுத்தி அழைத்துவந்தனர். இதனால், நான் அந்த நிறுவனங்களில் வேலை செய்வதை தவிர்த்தேன். 2013-ல் இருந்து திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை செய்து வருகிறேன். அங்கு ஒரு நாள்கூட நான் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகமால் வேலை செய்தது கிடையாது. இதே  நிலைமைத்தான் ஊரிலும் உள்ளது.


இந்த நிலையில், எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அப்படியிருந்தும் என்னைத் தொடர்ந்து பலர் கேலி செய்வதால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் மனதளவில் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கோர்ட்டுக்கும் செல்வேன். என்னைப் பொறுத்தவரை இதுவொன்றும் விசித்திரமாகத் தெரியவில்லை. நானும் புதுமையானவன் என்றும் கூறவில்லை. இந்த மாதிரி கேலி என்னை மனதளவில் பாதிப்படையச் செய்து விட்டது” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.