Skip to main content

தங்கை முறையில் உள்ள பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் - 'உயிர்களைப் பறித்த முறையற்ற காதல்'

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

A young man who tied a thali to a girl who was in a sisterhood-'Improper love that took lives'


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் துரைக்கண்ணு (36). கட்டட வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் மகள் பவித்ரா(21). பட்டதாரியான இவரை துரைக்கண்ணு காதலித்துள்ளார். இருவரும் அண்ணன் - தங்கை உறவு. இந்த உறவை மீறிய காதலை பெற்றவர்களும் மற்றவர்களும் கண்டிக்க, பவித்ரா ஒதுங்கத் தொடங்கியுள்ளார். ஆனால் துரைக்கண்ணுவால் பவித்ராவை மறக்க முடியவில்லை. அண்ணன் - தங்கை, சித்தப்பா - மகள் என்ற உறவுகளைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள் அதனால் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று துரைக்கண்ணு சொன்னபோது பவித்ரா மறுத்துள்ளார்.

 

இந்நிலையில் பவித்ராவிற்கு உடல்நலமின்றி வீட்டில் இருந்ததால், தன்னை சந்திக்கவில்லை பேசவில்லை என்று மன வேதனையும் கோபமும் கொண்ட துரைக்கண்ணு., சனிக்கிழமை பவித்ரா வீட்டில் அனைவரும் கூலி வேலைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்த பவித்ராவை தேடிப் போய் தாலி கட்ட அதற்கு பவித்ரா மறுப்பு சொன்னபோது, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் துரைக்கண்ணு.

 

A young man who tied a thali to a girl who was in a sisterhood-'Improper love that took lives'

 

கூலி வேலைக்குச் சென்ற பவித்ரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். கதறி அழுத உறவினர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் சொல்ல டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ரா உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணு உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முறை தவறிய காதலால் இரு உயிர்கள் பறிபோனதை நினைத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.