Skip to main content

ரயில்வே தண்டவாளம் அருகே உடல் பாகங்கள்! - கொலையா? தற்கொலையா?

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

young boy tirupattur train track

 

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதி வழியாக கொங்கு மாவட்டங்கள், கேரளா மாநிலத்துக்குச் செல்லும் ரயில்பாதை உள்ளது. இந்த ரயில்பாதை வழியாக அக்டோபர் 22ஆம் தேதி காலை சென்ற அப்பகுதி மக்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.
 

இரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளம் வயதுடைய, ஆண் தலை தனியாகவும், கை, கால்கள், உடல் தனியாகவும் இருப்பதைப் பார்த்து பயந்துபோயினர். இது தொடர்பாக உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தந்தனர். உடல் பாகங்கள், ரயில்வே பாதையில் இருப்பதால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றினர்.
 

பின் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆகிய இருதரப்பும் இணைந்து, இறந்தவர் சிறிய வயதாக இருப்பதால், இவர் யார், இது கொலையா அல்லது தற்கொலையா, எந்த ரயில் மோதியது? என்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் கரும்புப்பயிர் தீப்பிடித்து எரிந்து நாசம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
3 acres of sugarcane crop which was ready for harvest was destroyed by fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லரைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காதர்பாஷா என்பவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் பயிரிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு மலமலவென தீப்பற்றி எரிந்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து 45 நிமிடம் கழித்து தீயணைப்பு வாகனம் விவசாய நிலத்திற்கு சென்று ஐந்து நிமிடங்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க இயலாமல் தீயணைப்பு துறையினர் முயற்சியை தொடர தண்ணீரை மீண்டும் நிரப்பி வருவதற்குள் மூன்று ஏக்கர் கரும்பு தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த  பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகி உள்ளது.

விவசாயி காதர் பாஷா தனது குடும்பத்துடன் கொழுந்து விட்டு எரியும் கரும்பு தோட்டத்தில் தீயை அணைக்கக் கடும் முயற்சி செய்தும் பலனளிக்காமல் போகவே தீயை அணைக்க முடியவில்லையே என அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது . கரும்பு பயிர் முழுவதுமாக விளைந்து கரும்பு ஆலைக்கு கட்டிங் செய்து கொண்டு செல்லக் கடந்த 20 நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு நாசமானது அந்த விவசாயியையும் அவர் குடுபத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.