Skip to main content

சுட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர்...பதக்கத்தை கையிலேந்தி குமுறும் இளைஞரின் தந்தை!!

Published on 04/01/2022 | Edited on 05/01/2022

 

jlk

 

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள  செட்டிக்குளம் மீன் வளர்ப்பு குளத்தை குள்ளனம்பட்டி எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகனான இருபத்தி ஆறுவயதான இளைஞர்  ராகேஷ்குமார் குத்தகைக்கு எடுத்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் குத்தகை எடுத்த குளத்தை காவல் காத்து வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஆறு பால்ரஸ் குண்டுகள் பாய்ந்த ராகேஷ் குமாரை, உடனிருந்த  நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை  அமைத்தனர். அதோடு  தென் மண்டல ஐ.ஜி. அன்பும் ஸ்பாட் விசிட் அடித்து குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அருவாள்களை ஆய்வு செய்துவிட்டு திரும்பினார்.  அதைத் தொடர்ந்து ராகேஷ்குமாரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளான பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சில குற்றவாளிகளை  தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்

 

இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ராகேஷ்குமாரின் தந்தை மாணிக்கத்தை  சந்தித்த போது..... கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செட்டிகுளம் மீன் பிடிக்கும் குத்தகையை எனது மகனும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து எடுத்திருந்தனர். இந்த விஷயம் மேற்கு மரியநாதபுரம்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு தெரியவே எங்களிடம் வந்து நான் குளத்தில் மீன் வாங்கி வளர்த்து வருகிறேன். நீங்கள் எப்படி குத்தகை எடுக்கலாம் என்று பிரச்சனை செய்தால் நாங்கள் முறைப்படி எடுத்திருக்கிறோம் என்று கூறினோம். அப்படி இருந்தும் பிரகாஷ் பிரச்சனை செய்ததால் மீன் குஞ்சு வாங்கி குளத்தில் விட்ட பணத்தை கூட கொடுத்ததுடன், ஒரு சிலருக்கு  பணமும் கொடுத்து இந்த பிரச்சனையை அப்போது முடித்து விட்டோம். அப்படி இருந்தும் கூட கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய பிரகாஷ் திடீரென பத்துக்கும் மேற்பட்டவர்களை குளத்துக்குள் இறங்கி பிரச்சனை செய்து அங்குள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி விட்டு போய்விட்டார்.

 

hjk

 

அதைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தோம், அப்போது இரு தரப்பினரையும் போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பினார்களே தவிர ஒரு பெரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்தும் பிரகாஷ்சும் அவருடைய நண்பர்களும் அவ்வப்போது  எனது மகனிடம் பிரச்சனை செய்து கொண்டுதான் இருந்தனர் அப்படி இருந்தும் வழக்கம்போல் மீன்பிடி குத்தகை குளத்தை பாதுகாத்து வந்த நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் குளத்தை பாதுகாக்கச் சென்ற என் மகனை நாட்டுத் துப்பாக்கி போல  அவர்களே தயாரித்த பால்ரஸ் நிரப்பிய துப்பாக்கியால் ஆறுமுறை மறைந்திருந்து என் மகனை சுட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டான். அப்படி இருந்தும் உயிர் தப்பி விடுவான் என்ற நோக்கத்தில்தான்  குற்றவாளிகள் வைத்திருந்த அரிவாளால் என் மகனின் தலையிலையும் வயிற்றிலேயும் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.அந்த  இடத்தில் அந்தத் துப்பாக்கியை மட்டும் பயன்படுத்தாமல் அவர்கள் பய இருந்தால் கூட என் மகன் அவர்களை எதிர்த்து நின்னு போராடியாவது  உயிர் பிழைத்து இருப்பான்.

 

அந்த அளவுக்கு எனது மகன் திறமைசாலி, என் மகன் விளையாட்டு வீரர். புட்பால், கிரிக்கெட் எல்லாம் நல்லா விளையாடுவான் புத்தாண்டை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கூட எனது மகன் வெற்றி பெற்று முதல் பரிசாக கப்பை வாங்கிட்டு வந்து சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் என்னிடம் காண்பித்தார். அதைக் கண்டு நான் பூரித்துப் போய்விட்டு என் மகன் இந்த விளையாட்டில் தொடர்ந்து நல்லபடியா விளையாடி இது போல் பல கப்புகளை வாங்கி பெரிய ஆளாக  வருவான் என்று எதிர்பார்த்தேன். அப்படிப்பட்ட என் மகனை படுபாவிகள் கூட்டு சேர்ந்து கொலை செய்து விட்டனர். இந்த பாவம் அவர் களை சும்மா விடாது என் மகனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு போலீசார் தகுந்த தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.