Yesterday the NIA.. today the enforcement department!  Trichy Special Camp Jail!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் நேற்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில், இன்று அமலாக்கத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் சிறப்பு முகாமில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பரிவர்த்தனைகள் குறித்து இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment