Skip to main content

நாளுக்கு நாள் ஏறும் நூல் விலை.! -மத்திய அரசு பாராமுகம்

Published on 23/11/2021 | Edited on 24/11/2021

 

Yarn prices rising day by day.! -Federal Government Blindness

 

நாட்டில் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களும் நாளுக்கு நாள் விலையேற்றம் அடைந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கு அந்த பொருளின் மூலப்பொருளைக் கொள்ளை லாபத்துக்கு விற்க கார்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் என்ற விமர்சனமும் இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உதிரிப்பாகங்கள், வேளாண்மைக்குத் தேவையான உரம், பொருட்கள் இவற்றோடு சேர்ந்து ஜவுளி தொழிலையும் கார்பரேட் கம்பெனிகள் விழுங்கி விட்டது. இதன் விளைவு ஜவுளிக்கு மூலப் பொருளாள நூல் விலையை நாளுக்கு நாள் விலையை ஏறி அதன் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், அத்தொழில் சார்ந்த குடும்பத்தினரை நடு வீதியில் நிறுத்தியிருக்கிறது. நூல் விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள்.

 

தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த தொழில் ஜவுளி தொழில்தான். இப்போது இத்தொழில் சவக்களை படிந்த முகமாகக் காட்சியளிக்கிறது. காரணம் நாளுக்கு நாள் ஏறும் நூல் விலை ஏற்றம்தான்.

 

Yarn prices rising day by day.! -Federal Government Blindness

 

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில்தான் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் தொடர் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய பா.ஜ.க. அரசின் ஜவுளித்துறை.

 

நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் என்பது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று உற்பத்தி செய்து அனுப்புவார்கள். அப்படி ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களை கூட உற்பத்தி செய்து கொடுக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் ஆர்டர் எடுக்கும் போது அப்போதுள்ள நூல் விலையைக் கணக்கிட்டு உற்பத்தி தயாரிப்பு செலவையும் சேர்த்து, உதாரணத்திற்கு ஒரு வேட்டி அல்லது லுங்கியின் விலை 100 ரூபாய் என பேசி முடிக்கப்பட்டு ஆர்டர் எடுக்கப்படும். ஆனால் அந்த ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யும் கால இடைவெளிக்குள் நூல் விலை ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதனால் உற்பத்தி தயாரிப்பு செலவு கூடுகிறது. ஆனால் ஆர்டர் எடுத்த தொகைக்கு ஜவுளி ரகங்களை கொடுத்தால் அதன் மூலம் நஷ்டம் தான் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளியின் கூலியும் குறைக்கப்படுகிறது.

 

இப்படித் தொடர் வேதனையால் நூல் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள். அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் நகர், என் எம்.எஸ்.காம்பவுண்ட், ராமசாமி கவுண்டர் வீதி, சொக்கநாதர் கவுண்டர் வீதி, பிரிந்தாசாரி வீதி, அகில்மேடு வீதி, இந்திராநகர் உட்பட பகுதிகளில் உள்ள பத்தாயிரம், ஜவுளிக் கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப்பட்டன. இன்று கடை அடைப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

Yarn prices rising day by day.! -Federal Government Blindness

 

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கலைச்செல்வன் கூறும்போது, ''சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40 ம் நம்பர் நூல் ஒரு கிலோவுக்கு ரூபாய் 80 வரை உயர்ந்துள்ளது. 30 ம் நம்பர் நூல் ரூபாய் 90 க்கும், 20 ம் நம்பர் நூல் விலை ரூபாய் 50, வெப்ட் 40-ம் நம்பர் ஒரு பாக்கெட் ரூபாய் 11,000 இருந்து ரூபாய் 14, 200 வரையிலும் உயர்ந்துள்ளது. அதனை ஆர்டர் பெற்ற தொகைக்குள் நிறைவு செய்ய முடியாமல் கடும் நஷ்டத்தை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. நூல் விலையை இரண்டு மாதம் அல்லது ஒரு மாதம் ஒரு முறை மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஒருநாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூபாய் 150 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடந்தது மொத்தம் 300 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது." என்றார்.

 

நூலுக்கு மூலப்பொருள் பஞ்சு அந்த பஞ்சை உற்பத்தி செய்யும் விவசாயிக்குப் பஞ்சு விலை ஏறவில்லை. பஞ்சை விலைக்கு வாங்கி பெரும் நிறுவனத்திடம் விற்பனை செய்யும் இடைத்தரகர் என்கிற ஏஜென்சி ஒரு வித லாபம் பார்க்கிறார்கள். நூல் விலையை நாளுக்கு நாள் விலையேற்றி ஜவுளி தொழிலில் ஈடுபடும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். இருந்தும் பராமுகமாக இருக்கிறது மத்திய அரசு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.