Skip to main content

‘பகுத்தறிவு’ தலைவர்கள் நலம்பெற இறைவழிபாடு!- காற்றில் பறக்கிறதா கொள்கை?

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

தனது கொள்கைப்படி ஒருவர் தாராளமாக வாழ்ந்துகொள்ளலாம். அதுபோலவே, அதற்கு மாறான கொள்கையுடன், நம்பிக்கையை ஒரு பிடியாக வைத்துக்கொண்டு, மற்றவர்களும் வாழலாம். இந்தக் கொள்கையும் நம்பிக்கையும், புரிதல் இல்லாதவர்களால் அவ்வப்போது உரசிக்கொள்கின்றன.  விமர்சனத்துக்கும் ஆளாகின்றன.  அப்படி நடந்துவரும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

கலைஞர் உடல் நலிவுற்றிருந்தபோது, திமுக தொண்டர்கள் சிலர் கூட்டு இறைவழிபாடெல்லாம் நடத்தினார்கள். அப்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி ‘கலைஞரை மதிப்பது, அவர் கட்டிக்காத்த கொள்கையை மதிப்பதே ஆகும். மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையால் கலைஞர் நலம்பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் திமுகவினர் ஈடுபட வேண்டாம்.’ என்று கேட்டுக்கொண்டார்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

பகுத்தறிவுக் கொள்கையை முழுமூச்சாகக் கடைப்பிடித்துவருபவர் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி. கரோனா தொற்றிலிருந்து அவர் மீண்டுவர இறைவனைப் பிரார்த்திப்பதாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கமல்ஹாசனும் இறைமறுப்பு கொள்கையில் உறுதியாக உள்ளவர். அவர் பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் அக்கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். திருவொற்றியூரிலோ, மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர், எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் சென்று பாலபிஷேகம் நடத்தினர்.

 

Worship for the well-being of ‘rational’ leaders! -Does policy fly in the air?

 

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூரில் அரசு பள்ளி வகுப்பறையின் கரும்பலகையில் பேனர் கட்டி, திமுகவினர் சிலர் பூஜை செய்துள்ளனர்.

 

தங்களின் மீதான அன்பால் சிலர் பிரார்த்தனை செய்ததிலோ, பாலாபிஷேகம் நடத்தியதிலோ, பூஜை செய்ததிலோ, கி.வீரமணிக்கோ, கமல்ஹாசனுக்கோ, உதயநிதிக்கோ சிறிதும் உடன்பாடு இருந்திருக்காதுதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘தலைவர்களின் கொள்கை காற்றில் பறக்கிறதே!’ என்று நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

‘கடவுள் நம்பிக்கை இல்லை’ என்ற கொள்கை உள்ளவர்களும்கூட, அந்தக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களே! ஒருவருடைய வாழ்க்கையில் நம்பிக்கையானது மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இறைவழிபாடு நடத்துபவர்களுக்கோ,  அந்த நம்பிக்கை பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்கிறது. பிரார்த்தனைதான், தங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் நற்பண்புகளை வளர்ப்பதற்குமான பிரதான கருவி என்பதில், அவர்களும் உறுதியாக இருக்கின்றனர். பொதுவாக நம்பிக்கை என்பது, தங்களுக்குத் தேவையானது கிடைக்கும் என்ற புரிந்துணரலே ஆகும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.