Skip to main content

"கடந்த 10 ஆண்டுகள் என்ன ஆட்சி நடத்தினார்கள் என கேட்கும் அளவிற்கான பணிகள் தான் நடைபெற்றுள்ளன" - அமைச்சர் மா.சு பேச்சு

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

"Works have been done to the extent of asking what the government has been doing for the last 10 years" - Minister M. Su's speech

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் ரூ 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார்.

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நல வாழ்வு குழும நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம், காட்டுமன்னார்கோவில் வட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ரெட்டியூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், சிறுகாட்டூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், நத்தமலை கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், முட்டம் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ராஜேந்திரசோழகன் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மருத்துவத்துறை வரலாற்றில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது அநேகமாக கடலூரில் மட்டுமே நடந்திருக்கிற ஒரு சிறப்பான நிகழ்வு. இவ்வளவு கட்டிடங்கள் திறந்து வைத்த பிறகும் கூட இன்னும் 70-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் கட்டிடங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த கட்டிடங்களை எல்லாம் சீரமைப்பதற்கு ஏற்கனவே சி.எஸ்.ஆர் நிதியுடன் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு இருந்தாலும், இந்த 15 வது நிதி ஆணையின் கீழ் இன்னமும் சரி செய்ய வேண்டிய கட்டிடங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பட்டியல் போட்டு காட்டினார். அப்படிஎன்றால் கடந்த 10 ஆண்டுகள் என்னதான் ஆட்சி நடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கான பணிகள் தான் இங்கு நடைபெற்றிருக்கிறது.

 

ஒரே மாவட்டத்தில் 19 கட்டிடங்களை கட்டியதற்கு பிறகும், இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்ட வேண்டி இருக்கிற இந்த சூழல் இந்த மாவட்டத்தில் இருக்கிறது என்றால், மருத்துவ கட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததனால் 100 சித்த மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரு சித்த மருத்துவமனை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகின்ற இந்த மருத்துவமனைகள் 100 தமிழகத்தில் அமைய இருக்கின்றன" என்றார்.

 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில் "கம்மாபுரம் ஒன்றியத்தில் இருந்து பிரித்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சுமார் 17 கிலோமீட்டர் தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியை ஸ்ரீமுஷ்ணம் பகுதியுடன் சேர்க்க கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். கீரமங்கலம் -தேவங்குடி இடையே சிறு பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

 

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 54 லட்சம் மதிப்பில் வேளாண்துறை மற்றும் மருத்துவ துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான  பெட்டகம், விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

முன்னதாக அப்பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தனர். விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.