Skip to main content

ஒட்டப்பிடாரம் போலீசாரைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

இரண்டாம் கட்டப் பிரச்சாரமாக திமுக வேட்பாளர் சண்முயைாவை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு வந்த திமுக. தலைவர் ஸ்டாலின் காலை தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்தே பிரச்சாரத்திற்குக் கிளம்பி விட்டார். 

 

Women stir the road to against protest the police

 

புதுக்கோட்டை, காமராஜ் நகர் கூட்டாம்புளி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடத்திய ஸ்டாலின் மதியம் தூத்துக்குடியில் உள்ள சத்யா ரெஸ்டாரண்ட்டில் ஒய்வு எடுத்தார். மாலை அவர் தன், பிரச்சாரத்தை தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்திலிருந்து தொடங்குவதாக இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக வரவேற்பதற்காகவும் வல்லநாட்டின் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கூட்டமிருந்தது. அது சமயம், ஆண்கள் பெண்கள் திமுக கொடியோடு ரோட்டோரமிருந்தார்கள். 

 

Women stir the road to against protest the police

 

ஏ.டி.எஸ்.பி. வேடரத்தினம் தலைமையிலான போலீசார் பெண்களின் கூட்டம் நான்கு வழிச்சலைக்குச் செல்வதைத் தடுத்து அவர்களை கலியாவூர் சாலைக்குச் செல்ல வலியுறுத்தினர். ஆனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் பெண்கள் கூட்டம் அதிகமிருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யாமலும், வேகமாகக் கடந்து செல்லும் வானகங்களைக் கண்டு கொள்ளாமலுமிருந்தனர். கடந்த 12 ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தினை வேறுபகுதிக்கு மாற்றி விட்ட போலீசார் தற்போது ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூட்டம் அதிமாக இருந்தும் அவர்களை சாலை ஒரத்தில் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்களே தவிர குறைந்தபட்சம் போக்குவரத்தை மாற்றிவிடக் கூட ஏற்பாடு செய்யவில்லை. 

 

 

இதனால் திடீரென்று பெண்களின் கூட்டம் சாலையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை ஒரு வழியாக மாற்றி அமைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து, ஸ்டாலின் வரவேற்பதற்காகச் சென்றனர் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வந்த ஸ்டாலின், அங்கு வேட்பாளரை ஆதாரித்து பிரச்சாரம் மேற் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.