Skip to main content

பெண் அரசு ஊழியரை மிரட்டிய நபரை கைது செய்த மகளிர் போலீஸ்...!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Women police arrest man who threatened female government servant ...!


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது பெண்மணி, வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமண தகவல் இணையதளத்தில் தமக்கு 'மணமகன் தேவை' என்று அந்த அரசு பெண் ஊழியர் விளம்பரம் கொடுத்துள்ளார். 


இந்த விளம்பரத்தைப் பார்த்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள அணையேரி உல்லாசம் நகரைச் சேர்ந்த 44 வயது ஜோசப் ஸ்டாலின் என்பவர், அந்தப் பெண் ஊழியரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு, அவரைத் தேடி கடலூர் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணிடம் தான் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தி வருவதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 


வெளியிடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டார் தரப்பில் ஜோசப் ஸ்டாலினை தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டுள்ளனர். அவர்களுக்கு அவர் எந்த விவரமும் தரவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண்ணிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், என்னைத் திருமணம் செய்யாமல் போனால் என்னிடம் உள்ள (நாம் இருவரும் சேர்ந்து எடுத்த) ஃபோட்டோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 


கடந்த 5ஆம் தேதி செஞ்சி அருகில் உள்ள மட்டபாறை கிராமத்தில் உள்ள ஜோசப் ஸ்டாலின் உறவுப் பெண்ணான ஜெசிந்தாள் என்பவரது வீட்டுக்கு வருமாறு மிரட்டி அந்தப் பெண் அரசு ஊழியரை வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்துள்ளார். ஜோசப் ஸ்டாலின், இதன் பிறகு திருமணத்திற்காக, 40 ஆயிரம் பணம் இரண்டரை சவரன் நகைகளை அந்தப் பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார். 


இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை அந்தப் பெண் அரசு ஊழியரின் சகோதரிக்கு அனுப்பி உள்ளார், ஜோசப் ஸ்டாலின். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஜோசப் ஸ்டாலின் குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். அதில், ஜோசப் ஸ்டாலின் ஏற்கனவே திருமணமானவர். பெண் அரசு ஊழியரை பொய் சொல்லி ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அரசு ஊழியர் குடும்பத்தினர் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை இதனால் கோபம் அடைந்த ஜோசப் ஸ்டாலின் அந்தப் பெண் அரசு ஊழியரிடம் உனது ஆபாசப் படங்களையும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். 


இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அரசு ஊழியர், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஜோசப் ஸ்டாலின் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மட்டப்பாறை ஜெசிந்தாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ளனர் அனைத்து மகளிர் போலீசார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.