Skip to main content

வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்; ஒரு பெண்ணுக்கு 3 கணவர்கள் - திக்குமுக்காடிய காவல்துறை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

woman who is married to 3 men

 

வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருப்பது போல காட்சிகள் வரும் அப்படி ஒரு உண்மைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் 24 வயது ஸ்ரீ ராமகண்ணன். இவருக்குக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி திருபுவனைப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது அவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார் ராம கண்ணன்.

 

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் தோழி ஒருவர் திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீ ராம கண்ணனை தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்தப் பெண் ஸ்ரீராம கண்ணனை தான் காதலிப்பதாகவும் நாம் இருவரும் இங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசையாகக் கூறி அவரை தன் காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார். ஸ்ரீ ராம கண்ணனும் அந்தப் பெண்ணும் வேடசந்தூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக பூசாரிபாளையம் வந்துள்ளனர். இருவரும் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் விழுப்புரம் மாவட்டம் தக்கா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது ராம கண்ணனுக்குத் தெரிய வந்துள்ளது.

 

இருப்பினும் ஸ்ரீ ராம கண்ணன் அந்தப் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய செவலை கிராமத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தான் கருத்தரித்து இருப்பதாக ஸ்ரீ ராம கண்ணனிடம் தெரிவிக்க, சந்தோசமடைந்த அவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய உறவினர்களை அழைத்து மனைவிக்கு வளையல் அணி விழா நடத்தியுள்ளார். விழா முடிந்த கையோடு புதுச்சேரியில் உள்ள தாய் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து பெண்ணுக்கு அவரது தாய் வீட்டிலேயே குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதை அடக்கம் செய்துவிட்டோம் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ராமக்கண்ணன், மனைவி உடல்நிலை சரியாகும் வரை அவரது தாய் வீட்டிலேயே இருந்துவிட்டு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து மனைவியைப் பார்ப்பதற்காக அவர் தாய் வீட்டிற்குச் சென்ற ஸ்ரீ ராம கண்ணனிடம், அந்தப் பெண்ணின் தாயார் மகள் சில நாட்களுக்கு உங்கள் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாளே என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீ ராம கண்ணன், தன் மனைவியின் தோழிகள் உட்பட பல்வேறு இடங்களில் விசாரித்துள்ளார். ஆனால் அவர் எங்கு சென்றார் ? என்ன ஆனார்? என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராமக்கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் துணை ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் ராம கண்ணன் தனது சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூருக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெட்ரோல் பங்க்கில் ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணுடன் தனது மனைவி சேர்ந்து வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை வழிமறித்து இது யார் ஏன் நம் வீட்டுக்கு வரவில்லை என்று ராம கண்ணன் மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது அந்த பெண் நீ யார் என்றே எனக்குத் தெரியாது அப்படி இருக்க உன் மனைவி என்று என்னை எப்படி கூறுகிறாய் என்று ஏட்டிக்குப்போட்டியாக கேள்வி கேட்டுள்ளார்.

 

இதையடுத்து ஸ்ரீ ராம கண்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணையும் அவருடன் வந்த வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராம கண்ணனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை அவருடன் திருமணமே நடக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமக்கண்ணன் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடைபெற்ற திருமண புகைப்படங்களை போலீசாரிடம் காட்டி உள்ளார். போலீசார் விசாரணையில் அந்தப் பெண் தற்போது மூன்றாவதாக ஒரு இளைஞரைத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண் தனக்கு கர்ப்பம் தரிக்கவில்லை என்றும் தன் வயிற்றில் நீர் கட்டி இருந்தது அதை என் தாய் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சரி செய்துகொண்டேன். தற்போது மூன்றாவதாக இந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 

அவர் திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞரிடம் போலீசார் கேட்டபோது இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உரியத் தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.