Skip to main content

“வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும்; விலகி இருப்பதும் நல்லது” - தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ. சங்கீதா

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் எஸ்.ஐ அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகள் தின்று ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் தனது வாட்ஸ்அப்பில் வைத்துள்ள “வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும், சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. சுயநலத்திற்காக அல்ல தன்மானத்திற்காக” என்ற பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கீழ சவேரியார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் - ஜாஸ்மின் வித்யா தம்பதியினர். ஜாஸ்மின் வித்யா தனது கணவர் ஆரோக்கிய ராஜ் மீது சமூக நலத்துறை அலுவலகத்தில் வரதட்சணை புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்காக ஜாஸ்மின் வித்யாவிற்காக வழக்கறிஞர் கலீல் ரகுமான் சமூக நலத்துறை அலுவலகம் சென்றுள்ளார். 

 

சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி, ஜாஸ்மின் வித்யாவின் வழக்கறிஞரான கலீல் ரகுமானை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு புகார் குறித்து ஆரோக்கியராஜிடம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வெளியே வந்த ஆரோக்கியராஜ், வழக்கறிஞர் கலீல் ரகுமானை ஒருமையிலும் ஆபாசமாகவும் திட்டிவிட்டு  அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக கலீல் ரகுமான் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரது செல்போன் திருப்பி வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

இந்த நிலையில் புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா, தன்னை அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலீல் ரகுமான் முறையிட்டிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எஸ்.ஐ சங்கீதாவை இடமாற்றம் செய்வதாக முடிவானது. அதன்படி திருக்கோகர்ணம் எஸ்.ஐ சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

நேற்று காலை திருக்கோகர்ணம் காவல் நிலையம் சென்ற எஸ்.ஐ சங்கீதா, தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு லீவு கிடைக்கவில்லை. லீவுக்காக கடிதம் எழுதி வைத்தவர் மன உளைச்சலுடன் மாலை வீட்டிற்கு வந்து அதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று மயங்கி இருக்கிறார். வெகு நேரமாக எழாத அவரை உறவினர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

எஸ்.ஐ சங்கீதா தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து காவல் நிலைய நாட்குறிப்பை பார்த்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. லீவ் லெட்டருடன் ‘தன் சாவுக்கு காரணம் வழக்கறிஞர்களின் போராட்டமே. தவறு செய்யாத எனக்கு பணியிட மாற்றம். என் சாவுக்கு பிறகாவது போலீசாருக்கு நல்லது நடக்கட்டும்’ என்று எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

மேலும் போலீசார் கூறும் போது, வழக்கறிஞர் புகாரில் கூறப்பட்டுள்ள நபர் மீது வழக்குப் பதிவு செய்தாகிவிட்டது. அதன் பிறகு போராட்டம் செய்து போராட்டத்தின் போது சங்கீதா எஸ்.ஐயை தரக்குறைவாக சிலர் பேசியுள்ளனர். மேலும் போலீசாருக்காக இனிமேல் எந்த வழக்கிற்காகவும் யாரும் ஆஜராகக் கூடாது, அவர்களை நீதிமன்றத்தில் உட்கார வைக்கக் கூடாது என்றெல்லாம் பொது வெளியில் பேசியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்த எஸ்.ஐ, தவறு செய்யாத தனக்கு இடமாறுதல் கொடுத்து விடுப்பும் தரவில்லை என்ற விரக்தியில் இப்படி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.