Skip to main content

கரும்புத் தோட்டத்தில் சடலமாக கிடந்த பெண்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Woman passed away, Police in intensive investigation

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகிலுள்ளது துலுக்க நத்தம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவரது மனைவி முத்தம்மாள்(55). இவர் அப்பகுதியில் கருவாடு, மீன் போன்றவற்றை கூடையில் சுமந்து சென்று ஊர் ஊராக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி  மீன் வியாபாரத்திற்குச் சென்ற முத்தம்மாள் வீடு வந்து சேரவில்லை. முத்தம்மாளைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரது புகாரின் மீது இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாள் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துலுக்க நத்தம் கிராமத்திலிருந்து பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஒரு கரும்புத் தோட்டம் அருகே பெண்சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து கண்டமங்கலம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது முத்தம்மாள் மீன் வியாபாரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கூடை கிடந்துள்ளது. அதனருகில் உடல் அழுகிய நிலையில் முத்தம்மாள் கிடந்துள்ளார். இறந்தது முத்தம்மாள்தான் என்பதை அவரது குடும்பத்தினர் வந்து அடையாளம் காட்டியுள்ளனர்.

 

அதன்பிறகு முத்தம்மாள் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு 40 வயதில் மீனா, 38 வயதில் வெள்ளையம்மாள், 32 வயதில் பாப்பாத்தி ஆகிய மூன்று மகள்களும் ராஜீவ்காந்தி என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முத்தம்மாளின் பேரக் குழந்தைகளுக்கு காதணி விழா நடந்துள்ளது. அந்த விழாவில் மூன்று மகள்களும் மகனும் சேர்ந்து 5 சவரன் தாலி சங்கிலி முத்தம்மாளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர். இது தவிர இரண்டரை சவரன் அளவிற்கு கம்மல் மற்றும் மூக்குத்தி, வெள்ளிக் கொலுசுகள் ஆகியவை அணிந்துள்ளார்.

 

அவர் அணிந்திருந்த நகைகள் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் இருக்கும். அவர் மீன் வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு மாலை நேரத்தில தனது ஊருக்குத் திரும்பும்போது அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டுச் செல்வது உண்டு. அப்படி யாரிடமாவது லிப்ட் கேட்டு, அவரை வண்டியில் அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் நகைக்காக அவரைக் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர் ஊராகச் சென்று மீன் வியாபாரம் செய்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.